நாட்டின் வானிலை மாற்றம்!

நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மலையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் ஓரளவு மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மாகாணங்களில் காலை வேளையில் பனி மூட்டம் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.