யாழில் பிரதேச சபை உறுப்பினர் மரணம்!

யாழில் வீடொன்றில் வீசிய துர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்கள் அங்கு சென்று பார்த்தபோது , குறித்த வீட்டிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் யாழ்.வலி,கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு சாவகச்சோி – தனங்கிளப்பு பகுதில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். சடலமாக மீட்கப்பட்டவர் புத்துார் வடக்கை சேர்ந்த சுப்ரமணியம் சிவபாலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புத்துார் வடக்கை சேர்ந்த உயிரிழந்த நபர், உரும்பிராய் தெற்கு வட்டாரத்தில் போட்டியிட்டு பிரதேசசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தனங்கிளப்பில் அவர் வழக்கமாக தங்கும் வீட்டில் தனிமையில் தங்கியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த வீட்டிலிருந்தவரின் நடமாட்டத்தை காணாத அயலவர்கள் வீட்டை அவதானித்தபோது துர்நாற்றமும் வீசியுள்ளது. இதனையடுத்து உடனடியாக வீட்டுக்குள் பார்வையிட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.