யாழில் சாவிலும் ஒன்றிணைந்த தம்பதிகள் மனதை உருக்கும் சம்பவம்

வாழ்வில் ஒன்றிணைந்த தம்பதிகள் சாவிலும் ஒன்றிணைந்த மனதை உருக்கும் சம்பவம் ஒன்று சாவகச்சோி – சரசாலை வடக்கில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சரசாலை பகுதியை சேர்ந்த கதிரவேலு முருகேசர் (வயது 93) மற்றும் அவருடைய மனைவி முருகேசர் தங்கம்மா (வயது93) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மனைவி உயிரிழந்த நிலையில் அவரின் பிரிவை தாங்க முடியாத ஏக்கத்தில் சில மணிநேரத்தில் கணவனும் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்த தம்பதியினரின் சடலங்கள் ஒன்றாக தகனம்செய்யப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.