இம் முறை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற இருப்பவர் இவர்தான்

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த மாதம் ஒக்டோபரில் கோலாகலமாக தொடங்கியது. பிக்பாஸ் சீசனில் வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டுவரப்பட்டுள்ளது.

இம்முறை பிக்பாஸில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக திருநங்கைக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் திருநங்கையான நமிதா மாரிமுத்து வெளியேறினார். மேலும், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு மத்தியில் சண்டையும் கலவரமும் தொடங்கி இருக்கிறது.

இதனால் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அதோடு நிகழ்ச்சியில் இருந்து குறைந்த வாக்குகளுடன் உள்ள போட்டியாளர் வார வாரம் வெளியேற்றுவார்கள்.

இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியே போக இருக்கிறார்கள் என்ற தகவல் சமூக வலைதளங்களில் கசிந்து உள்ளது. இதுவரை நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து நதியா சாங்க், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

இதேவேளை இந்த வாரம் எலிமினேட் ஆகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்தது.

தற்போது இமான் அண்ணாச்சி, பவானி, மதுமிதா ஆகிய மூவரும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் இருந்தார்கள். அதோடு இந்த வாரம் முழுவதும் கொடுக்கப்பட்ட டாஸ்கில் கூட இவர்கள் சரியாக விளையாடவில்லை என்று புகாரும் எழுந்து இருந்தது.

தற்போது கசிந்து தகவல்படி, பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ்பெண்ணான மதுமிதா தான் குறைந்த வாக்குகளுடன் வெளியே போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இதேவேளை உண்மையில் பல தனியார் வலைதள ஓட்டிங்கில் பிக்பாஸ் போட்டியாளரான அபிநய்க்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் பதிவாகி இருக்கிறது என்பது தெரியவருகின்றது.