பிரபல பாடசாலை ஒன்றில் ஒரே நாளில் 17 மாணவர்களுக்கு கொரோனா தொற்று!

பென்தோட்டை, மொகொட சர்வதே பாடசாலை ஒன்றில் 17 மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் இந்த கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இதுருவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பேச்சாளர்கள் தெரிவித்துள்ளார்.

மாணவ மாணவிகள் 51 பேருக்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின்னர் இந்த மாணவர்கள் 17 பேர் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மாணவ மாணவிகள், அழுத்கம, பென்தோட்டை, ஊருகஸ்மன்சந்திய மற்றும் கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.