கொரோனா தொற்றிலிருந்து மேலும் பலர் குணமடைவு

நாட்டில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள நிலையில், இன்று மேலும் 340 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து நாட்டில் இதுவரை கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 542, 686 ஆகக் காணப்படுகின்றது.