மருமகனால் மாமனார்,மாமியாருக்கு நேர்ந்த விபரீதம்!

மாமனாரையும் மாமியாரையும் மருமகன் ஒருவர் கோடாரியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை விட்டு பிரிந்திருந்த கணவரே வீடு புகுந்து இவ்வாறு மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரைக் கோடாரியால் வெட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் தாக்குதலுக்காளான 62 வயதுடைய மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் ஆபத்தான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் கோரத் தாக்குதலை மேற்கொண்ட நபரை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.