மட்டக்களப்பில் சற்றுமுன்னர் விபத்து: ஒருவருக்கு நேர்ந்த விபரீதம்

கல்லடி வீதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் படுகாயமைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்விபத்து சம்பவம் இன்று காலை (24) மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது,

மட்டக்களப்பு கல்லடி வீதியில் வாகனம் திரும்பும் வளைவில் அக்கரைப்பற்றிலிருந்து மட்டக்களப்பை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து சமப்வம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்தவரை மோதிய பஸ் சிறிது தூரம் இழுத்துச்சென்றதாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதியைக் கைது செய்ததுடன், பேருந்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.