பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்…வெளியான தகவல்

பிக் பாஸ் சீசன் 5 தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் நமீதா மாரிமுத்து அவர்கள் தவிர்க்க முடியாத சில காரணத்தால் வீட்டிலிருந்து பாதியிலே விலகினார்.

மேலும் முதல் முறைப்படி எவிக்சனாக பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற டாஸ்க் எதிலும் ஆர்வம் காட்டாத நதியா சாங் அவர்கள் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வார எவிக்சன் லிஸ்டில் முதல் இரண்டு இடங்களில் அபிஷேக் ராஜா மற்றும் நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு ஆகியோர் இருந்தனர். இதில் கடந்த வரம் இடம்பெற்ற கோல்ட் காயின் டாஸ்க் மூலம் சின்ன பொண்ணு தப்பினார்.

மேலும் மக்களின் வாக்குகள் அடிப்படையில் வாரந்தோறும் நிகழும் எவிக்சன் ப்ராசஸில் தற்போது லுறைந்த வாக்குகளை பெற்று அபிஷேக் ராஜா வெளியேறுவதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.