55 வயது தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை.!

உத்திரபிரதேச மாநிலம், கௌதம புத்தா நகர் மாவட்டத்திற்குட்பட்ட ஜேவார் கிராமத்தை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 5 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த பெண் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், வயல் வேலைக்கு சென்ற அந்த பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி அந்த மர்ம கும்பல் பலாத்காரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உடனடியாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அந்த கும்பலில் நான்கு பேரை அதிரடியாக கைது செய்தனர்.

இந்நிலையில், இன்று இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான மகேந்திரன் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.