விவாகரத்துக்குப் பின்னர் சமந்தவின் முதல் பதிவு!

நடிகை சமந்தா தமிழ் மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை. அவர் தமிழை தாண்டி தெலுங்கில் நடிக்க சென்று அங்கு முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூல் சாதனை எல்லாம் செய்தார்.

அவரை கொண்டாடிய ரசிகர்களுக்கு சமீபத்தில் ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டார். அது என்னவென்றால் காதலித்து திருமணம் செய்த நடிகர் நாக சைத்தன்யாவை பிரிவதாக அறிவித்தார்.

அவர்களது பிறகு ரசிகர்களுக்கு கொஞ்சம் சோகத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம். பிரிய முடிவு செய்த பின் தனது டுவிட்டர், இன்ஸ்டா பக்கங்களில் அக்கினேனி என்ற தனது கணவர் குடும்ப பெயரை நீக்கி S என்று மட்டும் போட்டிருற்தார்.

இப்போது S என்பதை முழுவதுமாக Samantha என்று மாற்றியிருக்கிறார்.

எப்போதும் இன்ஸ்டாவில் சந்தோஷமான விஷயங்களை பதவிடும் சமந்தா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் இந்த உலகை மாற்ற வேண்டும் என்றால் முதலில் நான் திருந்த வேண்டும், அதை என் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.