விமானங்களை அழிக்கும் வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனை

விமானங்களை தாக்கி அழிக்கவல்ல புதிய வகை ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்ததாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து வட கொரிய அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வட கொரியா உருவாக்கியுள்ள புதிய வகை விமான எதிா்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

விமானங்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் இந்த சோதனை முக்கியப் பங்கு வகித்தது என தெரிவித்துள்ளது.

ஐ.நாவின் தடையை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.