மகனால் கண்கலங்கும் நாகர்ஜுனா

சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்த லவ் ஸ்டோரி தெலுங்கு படம் செப்டம்பர் 24ம் தேதி தியேட்டர்களில் வெளியாதுடன், முதல் நாளே உலக அளவில் ரூ.10 கோடி வசூல் ஆனது.

அமெரிக்காவிலும் லவ் ஸ்டோரிக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சக்சஸ் மீட் ஹைத்ராபாத்தில் நடந்த நிலையில், இதில் நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நாகர்ஜுனா பேசுகையில், என் மகனை பற்றி என்ன சொல்வது. லவ் ஸ்டோரியில் நாக சைதன்யாவின் நடிப்பை பார்த்து திருப்தி அடைந்துவிட்டேன்.

நாக சைதன்யாவை ஸ்டார் ஆக்டராக்கியதற்கு நன்றி சேகர். நீங்களை அவரை புதிய பாதையில் அழைத்துச் சென்றிருக்கிறீர்கள். அதற்கு நன்றி.

நாக சைதன்யா நீங்கள் அருமையாக நடித்திருக்கிறீர்கள். என்னை அழ வைத்தீர்கள், சிரிக்க வைத்தீர்கள்.

அப்பாவின் கெரியரில் மிகப் பெரிய ஹிட்டான பிரேம் நகர் ரிலீஸாகி 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த படம் ரிலீஸானபோது புயல் வந்தது. 50 ஆண்டுகள் கழித்து புயல் மற்றும் பான்டமிக் இடையே அதே செப்டம்பர் 24ம் தேதி லவ் ஸ்டோரி ரிலீஸாகியிருக்கிறது.

லவ் ஸ்டோரி இன்னொரு பிரேம் நகராகி வருகிறது. அதற்காக ரசிகர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.