இலங்கையில் நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு

அம்பாறை கல்முனைக்குடி பிரதேசத்தில் வீடொன்றில் நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சொன்று பிறந்துள்ளது.

வீட்டு உரிமையாளரால் நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து இவ்வாறு நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு பிறந்துள்ளது.

அடைகாக்க வைக்கப்பட்டதில் கிடைத்த ஏழு கோழிக்குஞ்சுளில் ஒன்றே இவ்வாறு பிறந்துள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 2 நாட்களேயான இந்த அதிசய கோழிக்குஞ்சை அயலவர்கள் ஆவலௌடன் சென்று பார்வையிட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.