தீனா படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ்.
இதன்பின் ரமணா, கஜினி, 7ஆம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்க்கார் பல வெற்றி படங்களை இயக்கி வந்தார்.
அதையடுத்தும் விஜய்க்கு ஒரு கதை சொன்னார். அந்த கதை விஜய்க்கு திருப்தி கொடுக்காமல் போனதால் அவர்கள் மீண்டும் இணையவில்லை.
அதன்பிறகுதான் விஜய்யின் 65வது படவாய்ப்பு நெல்சனுக்கு சென்றது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஜூராசிக் பார்க் பட ஸ்டைலில் ஹாலிவுட் பாணியில் குரங்கை மையமாக வைத்து ஒரு படத்தை எடுக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.