குழந்தைகளை தாக்கும் மற்றொரு ஆபத்தான நோய்… வெளியான தகவல்!

கொரோனா தொற்று குணமடைந்த குழந்தைகளில் சிலருக்கு, உடல் உறுப்புகளில் புதிதாக நோய்த்தொற்று ஏற்படுகின்றமை நாட்டில் அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று குணமடைந்த குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பல உறுப்பு நோய் தொற்று நாட்டில் தற்போது அதிகரித்து வருகின்றது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு சில குழந்தைகள் இந்த நோய்க்கு பலியாகிறார்கள் என்று கொழும்பில் உள்ள ரிட்ஜ்வே ஆர்யா குழந்தைகள் மருத்துவமனையின் நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நாட்டின் பல மருத்துவமனைகளில் இருந்து வருகின்றனர் என்பதோடு தற்போது முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் அதற்காக சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த நோய் காய்ச்சலால் ஏற்படுவதோடு கண்கள் சிவத்தல், நாக்கு சிவத்தல் மற்றும் தோலில் சிவப்பு புள்ளிகள் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

இந்த நோய் மூளை, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதயத்தையும் பாதிக்கலாம் எனவும் அது ஒரு ஆபத்தான நிலமை என்றும் அவர் கூறினார். குழந்தைகளில் இந்த நோய் கண்டறியப்பட்டாலும், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வரும் பெரியவர்களுக்கும் இது பதிவாகியுள்ளது என்று நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா குறிப்பிட்டார்