நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகையின் மகனைப் பார்த்துள்ளீர்களா?

மிர்ச்சி செந்தில் நடிப்பில் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர்.

சமீபத்தில் கூட, மாறன் எனும் புதிய கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் இரட்டை வேடத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்தார் செந்தில்.

இந்த சீரியலில் மாயனின் மூத்த தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சின்னத்திரை நடிகை காயத்ரி.

இவர் இதற்கு முன் வாணி ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியலில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை காயத்ரி தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில், அவரது மகனை பார்த்துவிட்டு, ரசிகர்கள் பலரும் நடிகை காயத்ரிக்கு இவ்வளவு பெரிய மகனா என கேட்க துவங்கிவிட்டனர்.

நடிகை காயத்ரி தற்போது தனது கணவர் யுவராஜுடன் இணைந்து Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.