நாட்டில் இதுவரை 117 பேருக்கு டெல்டா தொற்று!

நாட்டில் கொரோனா வைரஸின் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான கொரோனா பரிசோதனைகளில் டெல்டா திரிபுடன் மேலும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா வைரஸின் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.