கொரோனா பரவல் அபாயம் காரணமாக நாட்டில் முடக்கப்பட்டிருந்த திரையரங்குகளை கடுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் மொத்த ஆசன எண்ணிக்கையில் 50 வீதமானவர்களை அனுமதித்து மாத்திரமே திரையரங்குகளை திறக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்றுநோய் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் தாங்கள் பெரும் இழப்பை சந்திப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் வலியுறுத்தியிருந்த நிலையில் தற்பொழுது திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.