இலங்கையில் டெல்டா தொற்றுக்கு இலக்காகிய முதலாவது வெளிநாட்டுப் பிரஜை…. வெளியான தகவல்!

இலங்கையில் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாலைதீவுப் பிரஜை ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இந்த நிலையில் நாட்டில் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் அதிகளவானவர்கள் கொழும்பு நகரப்பிரதேசத்தையும், அதனை அண்மித்த பகுதிகளையும் சேர்ந்தவர்கள்.

இதேவேளை, இலங்கையில் டெல்டா தொற்றுக்கு இலக்காகிய முதலாவது வெளிநாட்டுப்பிரஜை இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.