கோலிவுட்டில் வெளியாகிய, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த திரைப்படத்திற்கு பின் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
இதன்பின் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஏதாவது சில திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க மட்டும் அவருக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது.
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் ஆபாசமாக நடித்திருந்த இவர் துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எப்பொழுதும் யாஷிகா சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருவது வழக்கம்.
டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் அப்டேட் கொடுத்துக் கொண்டே இருப்பது ரசிகர்களுக்கு கிலுகிலுப்பை ஏற்படுத்தும். இந்த நிலையில், தற்போது இன்ஸ்டா பக்கத்தில் யாஷிகா வெளியிட்டுள்ள போட்டோ படு வைரலாகியுள்ளது.
View this post on Instagram







