கணவனின் பிறப்புறுப்பை துண்டாக வெட்டி துடி துடிக்க கொலை செய்த மனைவி!

இந்தியாவில் கணவனின் பிறப்புறுப்பை இரண்டாவது மனைவி துண்டாக அறுத்து வீசிய சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள ஷிகர்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் மவுல்வி வகில் அஹ்மத். 57 வயதாகும் இவர் ஒரு மதகுருவாக இருந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு பெண்களுடன் திருமணமாகி அவர்களுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மவுல்வி வகில் அஹ்மத், 3-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன் படி, கடந்த வியாழக்கிழமை அவருடைய இரண்டு மனைவிகளிடமும் தெரிவித்த போது மனைவிகள் இருவருக்கும், கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாவது திருமணம் எல்லாம் வேண்டாம் என்று எவ்வளவு கூறியும், மதகுரு கேட்காத காரணத்தினால், அவருடைய இரண்டாவது மனைவியான ஹஸ்ராவிற்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மதகுருவுடன் அவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஏற்படவே ஹஸ்ராவை அவர் கடுமையாக அடித்துள்ளார்.

இதனையடுத்து அன்றிரவு மதகுருவான மவுல்வி வகில் அஹ்மத், தூங்கிய பிறகு, கோபத்தில் இருந்த அவருடைய இரண்டாவது மனைவி ஹஸ்ரா, அடுப்பங்கறையில் இருந்து கத்தி ஒன்றை எடுத்து வந்து தூங்கிக்கொண்டிருந்த அவருடைய கணவரின் பிறப்புறுப்பை துண்டாக்கி வெட்டி வீசியுள்ளார். இதன் காரணமாக அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு அவர் துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.