புதுப்பெண்ணான மருமகளின் அறையில் கேவலமான செயலை செய்த மாமியார்! மனமுடைந்து தற்கொலை செய்த மருமகள்..

தமிழகத்தில் புதுப்பெண்ணான மருமகளின் அறைக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்து மோசமாக கொடுமை செய்த மாமியாரால் அவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயல், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த பாலமுருகனுக்கும் ஜோதிஸ்ரீ என்ற பட்டதாரி பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது பேசியபடி நகை பணம் வரதட்சனையாக வழங்கப்பட்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு பாலமுருகன், மாமியார் அம்சா ஆகியோர் சேர்ந்து தாங்கள் “வீட்டுக் கடன் வாங்கி உள்ளோம். எனவே, தங்களுக்கு பணம் தேவைப்படுகிறது, உனது பெற்றோரிடம் சென்று பணம் வாங்கி கொடு என கூறி கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து ஜோதிஸ்ரீ பாலமுருகனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அதன் பின்னர் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் மீண்டும் கணவர் பாலமுருகன் வீட்டுக்கு மீண்டும் வந்தார்.

அப்போது மாமியார் அம்சா அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகின்றது இதனையடுத்து ஜோதிஸ்ரீ வீட்டின் முதல் மாடிக்கு சென்றார்.

இதனால் ஆத்திரமடைந்த அம்சா, ஜோதிஸ்ரீ இருக்கும் அறைக்குள் செல்லும் மின் வயரை துண்டித்தார். மாமியார் இப்படி கேவலமாகவும், மோசமாகவும் நடந்து கொள்கிறாரே என மனமுடைந்த ஜோதிஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் அடிப்படையில் ஆவடி பொலிஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஜோதிஸ்ரீ செல்போனில் இருந்து சில வீடியோக்கள் அழிக்கப்பட்டதை கண்டறிந்த பொலிசார் அதனை ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் கைப்பற்றினர் அதில் தனக்கு பைத்தியக்காரி என்று பட்டம் சூட்டி கணவரும் மாமியாரும் செய்த கொடுமைகள் குறித்து விவரித்திருந்ததோடு, தனது சாவுக்கு அவர்கள் இருவரும் தான் காரணம் என்று கூறியிருந்தார்.

மேலும் அவர் உருக்கமாக எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது. அதில் தமது தற்கொலைக்கு காரணமான தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை விட வேண்டாம் என தமது குடும்பத்தினருக்கு உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து பாலமுருகன், மாமியார் அம்சா , பாலமுருகன் சகோதரர் சத்யராஜ் ஆகிய மூவரையும் பொலிசார் கைது செய்தனர்.