துப்பாக்கி முனையில் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் சிறுமியின் தாய், பெரியம்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள மணலி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார். இவர் மணலி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகையில், ரேஷன் கடைகள் பணியாற்றிவரும் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், இந்த விஷயத்தை பெண்ணின் 15 வயது மகள் பார்த்துள்ளார். இந்த நிலையில், சதீஷ்குமார் அந்த சிறுமியை துப்பாக்கியை காட்டி மிரட்டி சிறுமியையும், சிறுமியின் தம்பியும் சுட்டுக் கொன்று விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
இதனால் பயந்து போன சிறுமி அதனை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். இந்த சூழலில், கொடூரன் சதீஷின் பார்வை சிறுமியின் மீது திரும்பவே, சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மாவை கட்டுக்குள் கொண்டுவந்து, ரூபாய் 50 ஆயிரம் பணம் கொடுத்து சிறுமியை படுக்கைக்கு அனுப்பி வைக்க கூறியுள்ளான்.
இந்த விஷயத்திற்கு ஐம்பதாயிரம் பணத்தை பெற்றுக் கொண்ட சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மாவும் ஒப்புக்கொள்ளவே, இதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் சிறுமியை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதனால் கடுமையான அளவு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்சனையை சந்தித்த சிறுமி, தனது தந்தையிடம் விஷயத்தை கூறுகிறார். இதனையடுத்து, சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளிக்கவே, இந்த விஷயம் தொடர்பாக புழல் மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையின் முடிவில், போக்சோ மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ்குமாரை கைது செய்தனர். சதீஷுக்கு உடந்தையாக இருந்த தாய் மற்றும் பெரியம்மாவையும் போக்ஸோ வழக்குகளின் கீழ் கைது செய்தனர்.