இந்தியாவில் இளம் வயதில் விமானி கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவர் குடும்பத்தார் படும் வேதனை மனதை உருக்கியுள்ளது.
டெல்லியை சேர்ந்தவர் ஹர்ஸ் திவாரி (36). இவர் ஏர் இந்தியாவில் விமானியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி திவாரி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
திவாரியுடன் சேர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீனியர் விமானிகளான கேப்டன் அமிதீஷ் பிரசாத், கேப்டன் பிரசாத் கர்மகர், கேப்டன் சந்தீப் ராணா, கேப்டன் கில் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த திவாரிக்கு தாஸ் என்ற மனைவியும், 5 வயதில் குழந்தையும் உள்ளது. தாஸ் கூறுகையில், திவாரி உயிரிழந்தது என் குழந்தைக்கு தெரியாது.
#LeftRightCentre | “My daughter doesn’t know (about father’s death). She is waiting for him to return from the hospital”: Mridusmita Das Tiwary, wife of Late Air India Captain Harsh Tiwary, breaks down pic.twitter.com/LmbvfbKo9I
— NDTV (@ndtv) June 8, 2021
அப்பா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பி விடுவார் என காத்திருக்கிறாள்! திவாரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக என் மகளிடம் கூறியிருக்கிறேன்.
அதற்கு, அப்பா வீட்டுக்கு வருவதற்கு ஏன் இவ்வளவு தாமதம் ஆகிறது, எப்போ தான் வருவார் என கேட்டு கொண்டிருக்கிறார். கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தான் என் கணவர் இறந்திருக்கிறார் என கூறியுள்ளார்.