கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் கோர விபத்து!

யாழ்.கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் நேருக்கு நேர் இரு கனரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் எதிரெதிரே பயணித்த இரு வாகனங்கள் வளைவு ஒன்றில் திரும்பும்போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில் சேத விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.