நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்

14 நாட்களுக்கு நாடு முடக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதென இராணுவ தளபதி ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து 14 நாட்கள் நாடு முடக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லையென இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.