மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோனா….!!

கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவை பெரிய அளவில் பாதித்துக் கொண்டிருக்கிறது.

நேற்று மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.3 லட்சம். இந்த எண்ணிக்கையில் தினமும் புதிய உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது இந்தியா.

இந்நிலையில் சமூக வலைதளங்கள் பக்கம் சென்றாலே பரிதாபமாக இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு மருத்துவமனைகளில் பெட் கிடைப்பது இல்லை, மேலும் மருந்துகளும் கிடைக்காமல் இருக்கிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உதவி கேட்டு கெஞ்சுகிறார்கள்.

அப்படியே இந்தியாவின் தேர்தல் விடயமும் பரபரப்பாக இருக்கின்றது. அது ஒரு புறம் இருக்க நாளுக்கு நாள் மீம்ஸ்களும் வைரலாகி கொண்டு இருக்கின்றது. அது எம்மை சிந்திக்கவும் செய்கின்றது.