பித்தப்பை கல்லை கரைக்கும் வல்லமை கொண்ட வேர்க்கடலையின் மகத்துவம்!

நிலக்கடலை, மணிலா கடலை என்றும் அழைக்கப்படும் வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிக அளவு இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. மேலும் உடம்புக்குத் தேவையான புரதச்சத்தும் அதிகமாக உள்ளது.

ஆயுளை அதிகரிக்கும் வேர்க்கடலை: நிலக்கடலை (வேர்க்கடலை) கடலை, கடலைக்காய், மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

இது பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்’ என்று நிலக்கடலையைக் குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது என ஆய்வுகள் உணர்த்துகின்றன.

வேர்க்கடலையை பச்சையாகச் சாப்பிடுவதைவிட, அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் இதை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையை தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில் தான் அதிக அளவு சத்துகள் உள்ளன. வேர்க்கடலையில் செய்யப்படும் கடலை மிட்டாயும் நல்ல சத்துணவு.

மன அழுத்தம் போக்கும்

நிலக்கடலையில் டிரைப்டோபீன் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது மூளை நரம்புகளைத் தூண்டும் செரட்டோனின் என்ற உயிர்வேதிப்பொருள் சுரக்க உதவுகிறது. இதனால் மனஅழுத்தம் குறைகிறது.

பித்தப்பை கல்லை கரைக்கும்

வேர்க்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இளமையுடன் வாழ

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. வேர்க்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய் வருவதை தடுப்பதுடன் இளமையுடன் இருக்கவும் வழி வகுக்கிறது.

எடை குறைக்கும்

உடல் எடை குறைக்க அற்புதமான உணவு நிலக்கடலை என்று பல சோதனைகள் நிரூபித்துள்ளன, தினமும் குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்க முடியும். நிலக்கடலை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பது தவறான நம்பிக்கை.

நினைவாற்றல் மேம்படுத்தும்

வைட்டமின் பி3, நயாசின், பிளேவனாய்டுகள் ஆகியவை மூளையின் ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. இதனால் மூளையின் முழுப்பரப்பிலும் ரத்த ஓட்டம் சீராகிறது. இவை மூன்றும் நிலக்கடலையில் போதுமான அளவு இருக்கிறது. எனவே, நிலக்கடலையை சீராக சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் மேம்படும்.

எலும்புக்கு வலிமை

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ், மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது.எனவே, நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம்

புற்றுநோய் வராமல் தடுக்கும்

பீட்டா sitoserol (எஸ்ஐடி) என்று phytosterol ஒரு வடிவம் வேர்கடலை உள்ளிட்ட சில தாவர எண்ணெய்கள், விதைகள், மற்றும் பருப்பு வகைகளில் அதிகளவு காணப்படுகிறது. இதனால் இதய நோய், புற்றுநோய் வராமல் தடுக்கும்.