நடிகை சமந்தாவின் முதல் காதல் பிரேக் அப் ஆனாது இங்கு தானாம்.!!

தென்னிந்திய திரையுலகில் டாப் 3 கதாநாயகிகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை சமந்தா.

இவர் நடிப்பில் தற்போது சாகுந்தலம், காத்து வாக்குல ரெண்டு காதல், உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுவாரஸ்யமான பல விஷயங்களையும், அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் சென்னை பல்லாவரம் மலையை குறிப்பிட்டு ” முதல் காதல் இங்கு தான்.. இதயம் உடைந்தும் இங்கு தான்.. கண்ணீர் விட்டு அழுத்தும் இங்கு தான் ” என உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு..