பொய் சொல்லி வீட்டை விட்டு வெளியேறிய நடிகர்! பிணமாக கிடைந்த சம்பவம்!

சினிமா வட்டாரத்தில் கடந்த ஆண்டு நிறைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் தற்கொலை சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகம் தான்.

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை சம்பவத்தின் பின் தமிழ் சீரியல் நடிகை சித்ரா தற்கொலை சம்பவம் இன்னும் தொடர் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்த ஸ்ரீவத்சவ் சந்திரசேகர் நேற்று முன் தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வல்லமை தாராயோ என்ற வெப் சீரிஸில் நடித்து வந்த அவர் கடந்த புதன்கிழமை அன்று படப்பிடிப்பு இல்லாத போதும் படப்பிடிப்பு இருப்பதாக வீட்டில் கூறிவிட்டு சென்னை பெரம்பூரில் உள்ள வீட்டிலிருந்து தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான மற்றொரு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். விசாரணையில் அவர் மன நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவசிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.