ஆர்மோனிய பெட்டியுடன் இருக்கும் இளையராஜாவை வில்,அம்புடன் பார்த்துள்ளீர்களா?

தமிழ் சினிமா எப்போதும் கொண்டாட வேண்டிய ஒரு இசைக் கலைஞர் இளையராஜா அவர்கள். அவர் மக்களுக்கு கொடுத்திருப்பது பாடல்களா என்ன இல்லை அது எல்லாமே மருந்துகள் என்று தான் கூற வேண்டும்.

துக்கம், சந்தோஷம், மன வருத்தம் என எல்லா விதமான உணர்வுகளுக்கும் அவரது பாடல்கள் தான் ஆறுதல். இதை பலர் கூற கேட்டிருப்போம்.

எப்போதும் இளையராஜாவை ஆர்மோனிய பெட்டிகளுடன் தான் பார்த்திருப்போம். ஆனால் அவர் வில்-அம்பு வைத்திருக்கும் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா, இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டோம்.

இளையராஜா ஒரு கையில் பாடல் வரிகளை வைத்துக் கொண்டு மறு கையில் சிட்டிகை போடுவது போல் ரவி என்பவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

அதை ராஜா அம்பைத் தொடுப்பது போல் படத்தை மாற்றி வரைந்துள்ளார் நடிகர் சிவகுமார்.

இதோ அந்த அரிய புகைப்படம்,