ஹிந்தி சீரியல் நடிகை திவ்யா பட்நாகர், யா ரிஷ்தா கியா கேக்லதா ஹய், தேரா யார் ஹூன்மெயின் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் கடந்த வாரம் உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவருக்கு கொரோனா இருப்பதை கண்டறியப்பட்டதை எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை உயிரிழந்தார். இளம் வயது நடிகை கொரோனாவால் உயிரிழந்திருப்பது ஹிந்தி திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.








