சென்னை அணிக்கெதிரான போட்டியின், கடைசி ஓவரில் அக்சார் பட்டேல் மூன்று சிக்ஸர்கள் அடித்து வெற்றி பெற வைத்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டோனியின் சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யரின் டெல்லி அணியும் மோதின.
இப்போட்டியில் டெல்லி அணி 179 ஓட்டங்கள் குவித்தது. அதன் பின் 180 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு கடைசி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
இதனால் சென்னை அணி வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி ஓவரை யாரும் எதிர்பாரத வகையில் சுழற்பந்து வீச்சாளர் அஜய் ஜடேஜா வீசினார். ஏனெனில் பிராவோவிற்கு ஓவர் இருந்தது, ஆனால் டோனி கொடுக்கவில்லை.
அதற்கான காரணமும் ஏன் என்று டோனி போட்டிக்கு பின் விளக்கியிருந்தார்.
இந்நிலையில், கடைசி ஓவரில் விளையாடிய அக்சார் பட்டேல் 2-வது பந்தில் ஒரு சிக்ஸர், அடுத்த பந்தில் ஒரு சிக்ஸர் மற்றும் 5-வது பந்தில் என மூன்று சிக்ஸர்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.
இதன் மூலம் சென்னை அணியின் கையில் இருந்த வெற்றியை அக்சார் பட்டேல் பறித்துவிட்டார் என்றே கூறலாம். ஏனெனில் சதமடித்த தவான் சுழற்பந்து வீச்சில் சற்று தடுமாறினார், அவர் விளையாடி இருந்தால் கூட சென்னை அணி ஜெயித்திருக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்து.