தளபதி விஜய் பாடிய எஸ்.பி.பி-யின் பாடல், நினைவு கூர்ந்த பிக்பாஸ் வனிதா!!

இந்திய அளவில் பிரபலமான பாடகராக விளங்கியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இவர் செப்டம்பர் 25 தேதி அன்று மறைந்தது இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

சினிமா துறையை சேர்ந்த பல பிரபலங்களும் தற்போது வரையில் அவரை பற்றி அல்லது அவரின் பாடல்கள் பற்றி நினைவு கூர்ந்து தான் வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகையான வனிதா எஸ்.பி.பி மற்றும் விஜய் குறித்து சுவாரஸ்யமான தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

” எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது எத்தனை முறை நடிகர் விஜய்யிடம் எஸ்.பி.பி-யின் மலரே மௌனமா பாடலை பாடும் படி கேட்டேன் என்று, அவரும் எனக்காக மிகவும் அழகாக பாடுவார்” என பதிவிட்டுள்ளார்.