நடிகை ஸ்ரீ ரெட்டி யார் என்பதை அனைவரும் அறிவார்கள். சர்ச்சைகளை கூறி பரப்பரப்பை ஏற்படுத்துவதோடு, கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர் அண்மைகாலமாக அமைதியாக இருந்துவந்தது அனைவருக்கும் ஆச்சரியமே.
அண்மையில் சினிமா திரையுலகில் போதை பொருள் புழக்கம் இருக்கிறது என செய்தி வெளியாக நடிகைகள் சிலர் சிக்கியது பலரின் கவனத்தை ஈர்த்தது. விசாரணையும் பெரிதளவில் போய்க்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்களை போதை பொருட்களை பயன்படுத்தி வருகிறார். இதுபோன்ற பார்ட்டிகள் அதிகம் நடைபெறுகிறது. அங்கே போதை பொருட்களை சர்வசாதாரணமாக புழங்கப்படுகிறது. பார்ட்டிக்கு வரும் பெண்களுக்கு போதை கொடுத்து பாலியல் பலாத்காரம் கூட நடைபெறுகிறது. எனக்கு உரிய பாதுகாப்பு கொடுத்தால் போதை பொருட்களை பயன்படுத்து யார் என்ற லிஸ்டை வெளியிட ரெடி என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.