தினமும் காலையில் இந்த டீயை மட்டும் குடிச்சு பாருங்க! எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்குமாம்

முன்னோர்கள் காலம் முதல் நமது வீட்டிலேயே சமையலறையில் ஆரோக்கியமான பொருள்கள் நிறைந்திருக்கிறது

அதில் மஞ்சள் முக்கிய இடம் பெறுகின்றது. ஏனெனில் காலங்காலமாக மஞ்சளை சமையலுக்கும், அழகுக்கும் இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மஞ்சளில் குர்குமின் என்னும் வேதிப்பொருள் உண்டு. இவை தான் மஞ்சளுக்குரிய நிறத்தையும் தருகிறது.

குர்குமின் எதிர்ப்பு அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. அந்தவகையில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மஞ்சளை எப்படி பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

தேவை
  • மஞ்சள் தூள்- கால் டீஸ்பூனில் பாதி அளவு,
  • சீரகத்தூள் – 3 சிட்டிகை,
  • இஞ்சித்துருவல் – கால் டீஸ்பூன்,
  • நாட்டுச்சர்க்கரை அல்லது பனங்கருப்பட்டி – இனிப்பு தேவையெனில்
  • எலுமிச்சைச்சாறு – 3 துளி
தயாரிப்பது எப்படி?

ஒரு கப் நீரை எடுத்து கொதிக்கவிடவும். அதில் மஞ்சள் தூள் கால் டீஸ்பூனில் பாதி அளவு இஞ்சித்துருவல் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

சீரகத்தூள் சேர்த்து இறக்கி வடிகட்டவும். இனிப்பு தேவையெனில் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து இளஞ்சூடாக குடிக்க வேண்டும்.

மஞ்சள் வாடை இல்லாமல் மசாலா வாசமும் இஞ்சி வாசமும் சேர்ந்து சுவையாக இருக்கும். தினமும் ஒரு கப் குடித்து வந்தாலே போதுமானது.

வேறு நன்மைகள்
  • உணவில் மஞ்சள் தூளை சேர்த்து வந்தாலே பெருமளவு புற்றுநோய் வருவதை தடுத்துவிட முடியும்.
  • மஞ்சள் உடலில் இருக்கும் நச்சு கிருமிகளை வெளியேற்ற செய்கிறது. அதோடு உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றுவதோடு செரிமான பிரச்சனைக்கும் முற்றூப்புள்ளி வைக்கிறது.
  • தொண்டைப்புண் சளி, இருமல் வரும் போதும் மஞ்சள் தூளை பாலில் கலந்து குடிப்பதும் உண்டு. இதனால் காய்ச்சல், சளி குணமாவதோடு அவை நுரையீரல் வரை சென்று பாதிப்படையாமல காக்கவும் மஞ்சள் உதவுகிறது.
  • மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் வேதிப்பொருள் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துவதால் அல்சைமர் என்னும் நோய்க்கான வாய்ப்பு குறைகிறது.
  • எடையை கட்டுக்குள் வைக்கும் ஆயுர்வேத கலவையாக மஞ்சளும் இஞ்சியும் இருப்பதால் இவை சிறந்த தீர்வாக இருக்கிறது. தொடர்ந்து குடித்துவந்தால் உடல் எடை குறைவதை உணரலாம்.
  • மூட்டுவலியின் தீவிரத்தை குறைக்க மஞ்சள் தேநீரை தொடர்ந்து எடுத்துகொண்டு வரலாம்.