தெலுங்கானாவில் திருமணத்துக்கு வந்த மணப்பெண்ணின் காதலன் மாப்பிள்ளை கண்முன்னே முத்தம் கொடுத்ததால் பரபரப்பானது.
கரீம் நகர் மாவட்டத்தின் ஹுஸுராபாத்தை சேர்ந்த நபருக்கும், அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஜோராக நடந்து கொண்டிருந்த நிலையில் மணமகளை மணமேடைக்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது குடிபோதையில் வந்த நபர் ஒருவர், மணப்பெண்ணின் பக்கத்தில் வந்ததுடன், “நாங்கள் இருவரும் காதலிக்கிறோம்” என்று கூறியபடியே முத்தம் கொடுத்துள்ளார்.
இதனால் மாப்பிள்ளை உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர், சுமார் 3 மணிநேர களேபரத்துக்கு பின்னர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அந்நபர் மீது வழக்குபதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தியதில் உண்மைகள் அம்பலமாகியுள்ளன.
தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விருப்பம் என்றும் மணப்பெண் கூறியுள்ளார்.
இதனையடுத்து மாப்பிள்ளை வீட்டாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த பொலிசார், மணப்பெண்ணை காப்பகத்தில் வைத்துள்ளனர்.