துளசியை மூலிகைகளின் ராணி என்று கூறுவார்கள்.ஆயுர்வேத மருத்துவத்தில் துளசி முக்கியபங்கு வகிக்கிறது.
பொதுவாக துளசி கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. துளசி உலர்வாகவோ, பச்சையாகவோ மற்றும் துளாகவோ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
துளசியில் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, தாமிரம், மக்னீஷியம் என்று நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன.
உங்கள் வீட்டில் துளசி செடி இருந்தாலே போதும் உங்களுக்கு வரும் பல்வேறு நோய்கள் குணமாகும்
நரம்புகோளாறு,ஞாபக சக்தியின்மை,ஆஸ்துமா,தொண்டை பிரச்சனை போன்ற நோய்களை குணமாக்கும் தன்மை துளசிக்கு உண்டு.
உங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்ட உடனே மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் 5,6 துளசி இலைகளை வாயில் மென்று வந்தாலே போதும்.
அந்தவகையில் துளசி டீ எப்படி தயார் செய்வது இதனால் என்னென்ன பலன் என்பதை பார்ப்போம்.
ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு கைப்பிடி அளவு துளசி இலை,1 ஏலக்காய்,சிறிய துண்டு இஞ்சியை தோல் நீக்கி இடித்து சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்த நீரை 5 நிமிடம் நன்றாக கொதிக்கவிட்டு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிக்கவேண்டும்.
பலன்கள்
- துளசி டீ இருமல்,சளி ,தலைவலியை குணமாக்கும்.
- கண் எரிச்சல் குணமாகும்.
- இரத்த அழுத்தத்தை குணமாக்கும்.இதய நோய் வராமல் பாதுகாக்கும்.
- துளசி டீ பருகுவது உடலில் கார்போஸ் மற்றும் கொழுப்புக்களின் வளர்சிதைமாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது
- சிறுநீரக கற்கள்,சிறுநீரக தொற்று போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த துளசி டீ -யை அவசியம் குடிக்கவேண்டும்.
- துளசியை தேநீராகப் பருகுவதால் நம் உடலில் ஏற்படும் சாதாரண நோய்களான சளி மற்றும் இருமலையும் குணப்படுத்தும்.
- துளசி டீ வாய்க்குள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் கிருமிகளை அழித்து பற்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது வைக்கிறது.
- துளசியின் புத்துணர்வு தன்மை வாய்க்கு புத்துணர்வை அளித்து, வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.
குறிப்பு
தினமும் அதிகளவு துளசி டீ -யை குடிக்கக்கூடாது. குறிப்பாக கர்ப்பிணிகள் கர்ப்பமாக முயற்சிக்கும் பெண்கள் அதிகளவு குடிக்கக்கூடாது.