இந்திய சினிமாவின் மிக பிரபலமான நடிகையான ஜெனிலியா கொரோனாவிலிருந்து மீண்டதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது, பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்நிலையில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டதாக நடிகை ஜெனிலியா தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு எனக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடந்த 21 நாட்களாக எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. கடவுளின் ஆசிர்வாதத்தால் எனக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது.
இந்த நோய்த்தொற்றுக்கு எதிராக என்னுடைய போராட்டம் எளிமையானதாக இருந்ததற்கு கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.
ஆனால், அதே நேரத்தில் இந்த 21 நாட்களும் தனிமையில் இருந்தது மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது என்பதை நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
வீடியோ கால்களும், டிஜிட்டல் உலகில் மூழ்குதலும் தனிமையின் கோரமுகத்தைத் தடுத்துவிட முடியாது. என்னுடைய குடும்பத்துடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி.
உங்கள் அன்புக்குரியவர்களுடன் இருங்கள். இதுதான் ஒருவருக்கு மிகவும் தேவையான உண்மையான பலம்.
விரைவாகப் பரிசோதனை செய்து, ஆரோக்கியமான உணவுகளை உண்டு, திடமாக இருப்பதே இந்தப் பேயை எதிர்த்துப் போராட ஒரு வழி’ என்று கூறியிருக்கிறார்.