சினிமா படப்பிடிப்பு நடத்தலாம், ஆனால்? விதிமுறைகளை அறிவித்த அரசாங்கம்..

கொரொனா காரணமாக சினிமா படபிடிப்பு நடக்காமல் இருந்தது. தற்போது மத்திய அரசு சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

சினிமா படப்பிடிப்பு தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதல் வெளியீடு இதோ…

படப்பிடிப்பின் போது நடிகர், நடிகை தவிர அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.

உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கையுறை கட்டாயம் படப்பிடிப்பு தளத்தில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.

படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

வெளிப்புற படப்பிடிப்பின் போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.