மனைவியின் முகத்தை கடைசியாக அவதானிக்க முடியாமல் நடந்த சோகம்…!!

புதுச்சேரி வில்லியனூர் மணவெளி பகுதியை சேர்ந்தவர் யோகநாதன். இவரது மனைவி குணவேலி கடந்த சில ஆண்டுகளாக மூச்சு திணறல் நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் குணவேலிக்கு மூச்சுத்திணறல் அதிகமான நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குணவேலிக்கு கொரோனா தொற்று இருக்கின்றதா என்பதை உறுதி செய்வதற்கு அரசு மருத்துவ கல்லூரியில் பரிசோதனை செய்யும்படி தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போது கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கை வந்தவுடன், மனைவியின் உடலை வாங்கிச் செல்ல வந்த போது அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

ஆம் மருத்துவமனையில் குணவேலியின் உடலைக் காணவில்லை. பின்பு லோகநாதன் மற்றும் குடும்பத்தினர் புகார்அளித்ததின் பேரில் விசாரணை நடைபெற்றுள்ளது.

விசாரணையில், குணவேலியின் அருகே இருந்த பாட்டியின் சடலத்தை வாங்கிச்செல்வதற்கு பதிலாக மாற்றி குணவேலியின் உடலை தவறுதலாக அடையாளம் காட்டி எடுத்துச் சென்று இறுதிசடங்கு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து யோகநாதன் கூறுகையில், ‘எனது மனைவி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, அவர் மீண்டு வர வேண்டும் என நினைத்தேன். ஆனால் அது நடைபெறவில்லை. தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்த போது, தொற்று உறுதியானால், அவரது முகத்தை பார்க்க முடியாதே என மனம் வருந்தினேன்.

ஆனால், கொரோனா இல்லை என தெரிந்த போது, முறைப்படி இறுதி சடங்குகள் செய்யலாம் என நினைத்திருந்தேன். கொரோனா தொற்று இல்லை என்றாலும் அவரது உடல் கிடைக்காமல் இருக்கும் போது எப்படியிருக்கும்’ என மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மனைவி இழப்புக்கு ஈடு செய்ய எதுவுமில்லை என வருந்தும் யோகநாதன், இந்த நிலைமை எந்த கணவருக்கும் வர கூடாது என தெரிவித்துள்ளார்.