சச்சின் ஆசைப்பட்டு வாங்கிய முதல் கார்!!

இந்திய கிரிக்கெட்டில் மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்கள் கொண்டாடப்படும் ஒரே வீரர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான்.

ஒரு போட்டியில் அவர் ஆட்டம் இழந்துவிட்டால் டிவியை ஆஃப் பண்ணிவிடுவோர் அப்போது ஏராளம். அந்தளவுக்கு அவர் மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், சச்சினுக்கு தொடக்கம் முதலே ’கார்’ என்பது ரொம்ப விருப்பமான ஒன்று. பிஎம்டபுள்யூ கார்களின் பெரிய ஃபேன் சச்சின். அதனால்தான் பிஎம்டபுள்யூ 7 சீரிஸ், பிஎம்டபுள்யூ 5 சீரிஸ், பிஎம்டபுள்யூ ஐ8, பிஎம்டபுள்யூ எம்5, பிஎம்டபுள்யூ எம்3 உள்ளிட்ட கார்களை வைத்திருக்கிறார்.

ஆனாலும், சச்சின் ஒரு காருக்காக தான் ஏங்குகிறார். அது, முதன்முதலாக தான் வைத்திருந்த ‘மாருதி 800’ கார் மீதுதான் சச்சினுக்கு அதிக பிரியமாம்.

ஆனால், தற்போது அந்த கார் அவரிடம் இல்லாத நிலையில், காரைப் பற்றி தகவல் தெரிந்தால் தனக்கு தெரியப்படுத்த சச்சின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில் ‘‘என்னுடைய முதல் கார் மாருதி 800. துரதிர்ஷ்டவசமாக தற்போது அது என்னிடம் இல்லை. மீண்டும் அந்த கார் என்னுடையதாக இருக்க நான் விரும்புகிறேன்.

எனவே, அந்த கார் குறித்த தகவல்கள் தெரிந்த நபர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார். இந்த தகவலை சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.