தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு. இவருக்காக ரசிகர்கள் கோவிலே கட்டி கொண்டாடினார்கள். அந்த அளவிற்கு குஷ்புவின் ரசிகர்கள் ஏராளம்.
இதையடுத்து, குஷ்பு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கிறார். ஆனாலும், கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், திடீரென குஷ்பு தன் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இன்று காலை தனது கண்ணில் கத்தியால் காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து மருத்துவமனை சென்று கண்ணுக்கு கட்டுப் போடப்பட்டு உள்ளதாகவும் குஷ்பு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
மேலும், கண்ணில் கட்டுபோடப்பட்ட ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து குஷ்பு விரைவில் நலமாக வேண்டும் என்று நெட்டிசன்களும் அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
குஷ்பு கண்ணில் காயம் பட்டு கட்டுடன் உள்ள புகைப்படம் தற்போது இணையத்தளங்களில் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.