வடக்குக்கான புகையிரத சேவை பாதிப்பு!

வடக்கு நோக்கிய புகையிரத போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

நேற்றிரவு(16) கொழும்பு, கோட்டையிலிருந்து தலைமன்னார் வரை பயணித்த புகையிரதம், செனரத்கம பகுதியில் தடம்புரண்டது.

இதன் காரணமாக புகையிரத போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து வடக்கு புகையிரத மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரதங்கள், கல்கமுவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், புகையிரத கட்டுப்பாட்டறை மேலும் தெரிவித்துள்ளது.