பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட தகவல்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த சுமார் 5 பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி இலங்கை தொழில்நுட்ப சேவையின் மோட்டார் வாகன பரிசோதகர்களுக்கான தடைதாண்டல் பரீட்சை 2017(2020), அதிபர் சேவையின் இரண்டாம் தர அதிகாரிகளுக்கான தடைதாண்டல் பரீட்சை 2019 (2020), இலங்கை தொழில்நுட்ப சேவையின் தானியங்கி ஆய்வாளர்களுக்கான பரீட்சை, தொல்லியல் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட பரீட்சைகளே இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் தினங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை, க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளில் மாற்றம் செய்வது குறித்து முடிவெதுவும் எடுக்கப்படவில்லையென்றும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.