பெண்களே இந்த இரகசியத்தை தெரிஞ்சு வெச்சிக்கோங்க!

திருமணமான பெண்கள் செய்யக்கூடிய ஒருசில விஷயங்கள் அவர்களின் வாழ்க்கைக்கு துரதிஷ்டங்களை ஏற்படுத்துகிறது.

தற்போது பெண்கள் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டிய வாஸ்து இரகசியங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • வளையல் பெட்டியில் உடைந்த வளையல்கள் இருந்தால் உடனே அதை அகற்றிவிடுங்கள்.அப்படியே வைத்திருத்தல் கூடாது.
  • பெண்களுக்கு திருமண புடவை என்பது முக்கியமான ஒன்று. அந்த திருமண புடவையில் சிறு கீறலும் வியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி நேர்ந்தால் அது கெட்ட சகுனம் என்று சாஸ்திரம் கூறுகிறது.
  • முடிந்த அளவுக்கு திருமணமான பெண்கள் அடிக்கடி மெகந்தி போட்டுக்கொள்ளுங்கள். இது கணவன் மனைவிக்கு இடையேயான பந்தத்தை அதிகப்படுத்தும்.
  • நீங்கள் உபயோகித்த பொட்டை மற்றவர்களுக்கு தரக்கூடாது. அவ்வாறு செய்தால் உங்களின் அதிர்ஷ்டத்தை நீங்களே இழந்ததிற்கு சமம்.
  • உங்களின் திருமண நகைகளை மற்றவர்களுக்கு எக்காரணம் கொண்டும் இரவலாக கொடுக்கக்கூடாது.
  • தங்கம் என்பது லட்சுமி தாயாரின் உருவமாக கருதப்படுகிறது. ஆகவே தங்கத்தை காலில் அணிந்தால் லட்சுமி தாயாரின் கோவத்திற்கு ஆளாவீர்கள். மேலும் இது லட்சுமி தாயாரை அவமதித்ததற்கு சமம்.
  • பெண்கள் தாங்கள் பயன்படுத்தும் அலங்கார பொருட்களை பூஜைக்கு பயன்படுத்துவார்கள். இவ்வாறு செய்யக்கூடாது.காலியான அலங்கார பொருட்களை தூக்கி வீசவும் கூடாது. உங்களின் தோட்டத்தில் அல்லது பூஜை அறையில் அதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
  • வைரம் உங்களுக்கு பொருத்தமானதா இல்லையா என்பதை அறிந்தே நீங்கள் வைரத்தை வாங்கவேண்டும். ஒவ்வொரு உலோகமும் ஒருவித ஆற்றலை வெளிப்படுத்தும்.