என்னை நடிக்கவிடாமல் துன்புறுத்தினார் வடிவேலு – காமெடி நடிகர் பெஞ்சமின்

வெற்றிக்கொடிகட்டு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் பெஞ்சமின்.

சமீபத்தில் பல தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து வந்துள்ள இவர் ஒரு பேட்டியில் வெற்றிக்கொடிகட்டு படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கேட்டபோது அவர் பார்த்த வடிவேலுவின் சுயரூபத்தை பற்றி விளக்கியுள்ளார்.

அதில், கே.பாலச்சந்தரின் நடிப்புப் பட்டறையில் நடித்துக்கொண்டிருந்த பெஞ்சமினை ஒரு நாடக அரங்கேற்றத்தின் போது இயக்குனர் சேரன் பார்த்துவிட்டு வெற்றிக்கொடி கட்டு படத்தில் நடிக்க வரச் சொல்லியிருந்தார்.

சேரன் சொன்னபடி வெற்றிக்கொடிகட்டு படப்பிடிப்புக்கு சென்ற பெஞ்சமின் கிட்டத்தட்ட 18 நாட்கள் ஒரு புளிய மரத்து அடியில் நாற்காலியைப் போட்டு உட்கார வைத்து விட்டாராம்.

காரணம் கேட்டதற்கு வடிவேலு பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் உங்களுடைய காட்சியும் அவருடைய காட்சியும் ஒரே நாளில் எடுக்கப்படவேண்டும்.

அதனால் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வடிவேலு நாளைக்கு வந்து விடுவார். என கிட்டத்தட்ட 18 நாட்கள் பெஞ்சமினை ஒரு புளிய மரத்தடியில் உட்கார வைத்திருக்கிறார் இயக்குனர் சேரன்.

இதையடுத்து, ஒருவழியாக வடிவேலு படப்பிடிப்புக்கு வந்தவுடன் இவர்களுக்கு இடையேயான காட்சி எடுக்கப்பட்ட போது பெஞ்சமினை நடிக்க விடாமல் வடிவேலு தனது முக பாவனையால் கிண்டல் செய்ததாகவும், அதனால் பெஞ்சமின் வடிவேலு பார்த்து திட்ட வேண்டிய காட்சி கிட்டத்தட்ட 5 ரீல் பெட்டிகளுக்கு மேல் வீணாக்கப்பட்டதாகவும் பகிர்ந்தார்.

மேலும், அதன் மதிப்பு மட்டும் 60 ஆயிரம் ரூபாய் எனவும், கடைசியில் நடிகர் பார்த்திபனின் உதவியுடன் வடிவேலுவை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்திவிட்டு பின் அந்த வடிவேலுவை திட்டுவது போல இருந்த காட்சி படமாக்கப்பட்டது என கூறினார்.

இவ்வாறு தான் ஒரு புதுமுக நடிகர் என்றும் பாராமல் என்னை நீ திட்டி விடுவாயா?? திட்டி விட்டு உயிரோடு ஊருக்கு போய்டுவியா என்ற தோணியில் மிரட்டி என்னை பயமுறுத்தி பல டேக்குகள் வாங்க வைத்து 60 ஆயிரம் ரூபாய் வரை வீணடித்து விட்டார் அந்த ஒரு காட்சிக்காக.

அனைவரும் ரசித்து பார்த்த அந்த நகைச்சுவை காட்சிக்கு பின் இவ்வளவு பெரிய சம்பவம் உள்ளதா என இந்த பேட்டியை பார்த்தபின் அனைவரும் ஆச்சரியப்பட்டும், பெஞ்சமினுக்காக பரிதாபப்பட்டும் வருகின்றனர்.

இந்நிலையில் வடிவேலுவை பற்றி பல புகார்கள் நாளுக்கு நாள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பெஞ்சமினின் புகாரும் தற்போது வைரலாகி வருகிறது.