தேர்தல் விசாரணைகள் தொடர்பில் சற்றுமுன் வெளியான தகவல்!

நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதியினை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கான இறுதி தீர்மானம் நாளைய தினம் அறிவிக்கப்படவுள்ளது.

ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ள நிலையில்,

அந்த மனுக்களை விசாரணை செய்வதா? இல்லையா? என்பது குறித்து நாளை பிற்பகல் 3 மணிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்.

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த வர்த்தமானியையும் பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும் செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவுக்கு வந்துள்ளது.