கொரோனா வைரஸ் பரவலை அடுத்து பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டமை தெரிந்ததே.
இதில் மைக்ரோசொப்ட் நிறுவனமும் ஒன்றாகும்.
தற்போது இந்நிறுவனம் தனது பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் காலத்தை மேலும் நீடித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை இக் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மே மாதம் 4 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கோரப்பட்டிருந்த நிலையில் இக் கால எல்லை நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதுவரை கொரோன பரவலானது உலக நாடுகளில் சற்றும் குறைவடையாத நிலையில் இக் கால எல்லையானது மேலும் நீடிக்கப்படலாம் என்பது குறிப்பிடப்படுகின்றது.